Thursday 1 October 2009

ஒரு பதில்

தவம், கடவுள், பக்தி, இவைகானும் அனுபவம் எனக்கில்லை
ஆராயும் நுண்ணறிவும் இல்லை!

என் அனுபவம், மக்களும் மாக்களுமே!
யாம் அறிந்தது அவைகளிடத்து அன்பு செய்தல்!

வாடிய பயிரை காணும்போதெல்லாம் தானும் வாடிய என் பாட்டன் வள்ளலார்
சமூகத்தை சார்ந்தவன் நான்! - அன்பு செய்தலை தவிர வேறன்ன பேரானந்தம் எனக்கு!

சொல் நண்பா!?,

பறவைகளை நேசிக்கிறேன், அவைகளோடு சண்டை போடுவதே எனக்கு பேரானந்தம்!
ஆம், மாலைவேளைகளில் அவைகளோடு பேச்சு யுத்தம், வந்து பார் நண்பா, எங்கள் ஊர் கோவில் ஆலமரத்துக்கு!

மரங்களோடு இனைந்து, கொடிகளோடு சாய்ந்து, பயிர்களோடு பயின்று தென்றலோடு உலா வருவதில் எத்துனை சுகம்!.

ஆற்றங்கரயில அப்டி என்னதான் இருக்கோ!?, என் அன்னையின் சுப்ரபாதம் அது!
அவளுக்கும் தெரியும் மனிதனை ஆனந்தமாக்கும் மந்திரம் அங்குள்ளது!!

மண்வாசனை, இந்த சொல்லே போதுமே, ஆயிரம் நினைவுகள் கண்திரையில் வருமே!
புழுதி, என் இனத்தின் நிறம் அது, எங்கள் ஆனந்தங்களை பரப்பும் ஊடகம்!

இவை தவிர வேறன்ன வேண்டும் நண்பா, இவைகளே எனக்கு கடவுளை விட பெரிது!
யாம் விரும்பவதெல்லாம், எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே!.

Sunday 13 September 2009

அஃறிணை மேல் என் காதல்



நான் பார்க்கிறேன், தான் தோங்கிய அழகிய மரங்களை! நான் கோப கனலில் தத்தளித்த போது அதன் சாமரங்கள் எனைக் குளிரூட்டும்.

தனிமை எனை ஆட்கொள்ளும், கூட்டம் கூட்டமாய் என் தோட்டத்து மரங்களெல்லாம், எனை வாரி அணைத்து சொந்தம் கொண்டாடும்!

உறவு தாகத்தின் உச்சம், என் சித்தப்பன் பூவரசமரம் , என் பெரியப்பன் ஆலமரம், என் சகோதரன் வேலமரம் என் தாத்தன் வேப்பமரம், இப்படி உறவாடி மகிழ்வேன்!

அமைதியின் பனிமலையாய், அக்னியின் எரிமலையாய் எனக்கு வாழ்க்கை பரிட்சயம் மரங்களின் இயல்பு நிலை தான்!

வா!, ஆனந்தம் வெளியே காத்திருக்கிறது என இசைத்திடும் - அதிகாலை சிட்டுகளின் மெட்டுகளில் என் சந்தோசங்கள் கரைந்துள்ளதை நான் உணர்கிறேன்!

மாலை காலமும் ஆலமரமும் பட்சிகளின் ஆரவாரத்தில் அமைதிகொள்ளுமே! என்னதான் பேசும்!?, அனுபவ பரிமாற்றமா?, பஞ்சாயத்து கூட்டமா?, காதல் மொழிகளா?



ஏன்!?, எனக்குமட்டும் இந்த ஏகாந்தம்! என் பிறப்பிடம் வயலும் வயல் சார்ந்த இடமும் என்பதால் எனக்கும் இயற்கைக்குமான ரசவாதம் மிகுதியோ!

மண்வாசனையை என் வாசனையாக கொண்ட காலங்களும் உண்டு!, மண்ணோடு புரண்டு மன அழுக்கை துடைத்துள்ளேன். சேற்றில் முளைத்த செந்தாமரைகளோடு சலசலப்பில் உட்பட்டதுண்டு!



நிலக்கடலை தோட்டங்களிலும் கேழ்வரகு சருகுகளிலும் என் மனதை தொலைத்துள்ளேன். நிர்வாகவியலின் ஏட்டில் என்னதான் உள்ளது!. நெற்கதிரருக்கும் இனத்தாரோடு பேசுவேன், ஆயிரம் நிர்வாகவியலின் தத்துவமும் பெறுவேன்!

ஆற்றங்கரை, மனதை பதித்துவைக்கும் கருவறை. என் இன்னொரு அன்னையாக இதுவரையில். பத்து திங்கள் மட்டுமே எனை சுமக்கவில்லை!. என் கண்ணீரை யாரும் பாராமல் அவள் வாங்கி கொண்டதுண்டு!

பச்சைக்கிளிகள், கனவு தேவதைகள். என் காதல் சுமந்த பாக்யசாளிகள். ஆலமரத்தடியில் எத்துனை காதல் மொழிகள் பேசினோம்! அவளின் சிரிப்பில் என்னுள் கோடி இன்பம் பிறக்கக் கண்டேன்!

Thursday 13 August 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 2



மாலை நேரங்கள், அலுவல்களை அணைத்துவிட்டு,
தலைவன் தாமதமாய், தலைவி எரிமலையாய்,
சிரிப்பான், சமாளிப்பான், அணைப்பான்!
அது தாமத வெட்கங்கள்!


தலைவி பேரழகியானாலும்,
சுற்றத்து குமரிகளை நோட்டமிட்டு,
தலைவியிடம் அசடுவளியும் தலைவனிடத்து,
வாலிப வெட்கம்!

தன்பாதியின் சுற்றத்தை பரிகாசித்து,
தன்சுற்றத்தை புகழ்ந்து பேசி,
தலைவியிடத்து சம்பாதிக்கும் கோபம்
ஏகாந்த வெட்கம்!



ஆயிரம் பேரை ஆளுமை செய்தாலும்,
தலைவியின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு,
அவ்வபோது அவள் சொல் கேட்கும்,
ஆசை வெட்கம்!

தலைவியின் பிறந்த வீடு,
அங்கு செல்வதே அரிது, சென்றாலும்,
மதியாமல் திரிந்து, ஏளனம் செய்வது,
மாப்பிளைமுறுக்கு வெட்கம்!



வருவான், போவான், வழக்கம் போல் பேசுவான்,
ஒரு நாள் தலைவி அறியா வியப்புதனை
அவளுக்கே பரிசளித்து, புதிதாய் தனையாக்கும்
திடீர் வெட்கம்!

Tuesday 4 August 2009

அனுமதியும் வரமும்

நீ அனுமதித்தால், நான்
நீ பருகும் நீராய் கடவுளிடம் வரம் கேட்பேன்!
உன் வெண்ணிற பற்களிடையே ஒட்டி உறவாடும் அந்த பயணித்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
நீ பூசும் உதட்டு சாயமாக வரம் கேட்பேன்!
உன் செந்நிற இதழ்களிடையே தஞ்சம்புகும் அந்த தருணத்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன்னை பிரதிபலிக்கும் முககண்ணாடியாய் வரம் கேட்பேன்!
உன் நிறம் மாறா முகபிம்பத்தில் நகையாடும் அந்த சினுங்களுக்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் வருகையை பறையும் கால் கொலுசுகலாய் வரம் கேட்பேன்!
உன் அந்தத்தை அறிந்துகொள்ளும் அந்த வாய்ப்பிற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் நெற்றிப்பொட்டின் குங்குமமாய் வரம் கேட்பேன்!
உன் இருபுருவ சாமரங்கள் வீசும் அந்த தென்றலுக்காக.

அனுமதியும் வரமும் தொடரும்..,

Monday 3 August 2009

தவமின்றி வரம் கிடைக்குமா?

கடும்தவம் புரிவார்
உலகின்பம் துறவார்!
ஞான ஒளி பெற்று, பேரின்பம் அடைவார்!.

வியந்தேன்,

என்ன தவம் புரிந்தேன்!
உலகின்பம் மறந்தேன்!
கடை இரு விழியால் பேரின்பம் அடைந்தேன்!

ஒரு இரவில் கூடுவார்!
பத்துத்திங்கள் காப்பார்!
புதியதோர் உயிர்க்கு பிறப்புதனை பரிசளிப்பார்!

வியந்தேன்,

ஒரு நாழிகை கண்டேன்!
மறு நாழிகை நினைந்தேன்!
புதியவன் என் பிறப்புதனை எனக்கே பரிசளித்தேன்!

பகவத்கீதை அறிந்தேன்!
எதனையும் கொண்டுவரவில்லை!
எதனையும் விட்டு போவதில்லை!
எதனையும் எடுத்து செல்வதில்லை!

வியந்தேன்,

உன் அழகினை கொண்டுவந்தாய்!
அதன் சுவடுகளை விட்டு சென்றாய்!
என் நினைவுதனை எடுத்து சென்றாய்!
யாரடி நீ?.
புதிய காதல்கீதை அருளும் பெண்பால் கிருஷ்ணனா?

Friday 17 July 2009

Deja Vu

It was late evening, am sure that it was Friday. I had a casual walk towards the Main Road and met a smart guy. I still remember, he wore Blue T-shirt and the text was name of foriegn University. Hey!, young man, enna padikarappa?, he askd. I replied, naan 8th padikiren neengha?. He replied casually, MS in States. In d mean time, he opened his purse, there was somethng like card. Once i askd him, he told its somthng so called Credit card. Apdina enna?, he simply said, panam thevaye illa ithu pothum.

At that time, i decided, i will do MS in any of the foriegn country. And i did in Deutschland. I thank him

Der was a cultural function in Annamalai University for BE students and my Brother was asking me to come along as he was doing BE. I went there with him, and had talk with his friends. Notably, der was a guy named Arul ( still i remember the name :)), he was simply smart in luk. Anna, anna, yaaruna avaru, avan en friendu da, Neyveli paya, Computer Science padikuraan adhaan sceana poduraan!, he replied.

Askd myself, am i able to be like dat one day?, finished my BE in Computer science. I thank him.

Today, my Boss, he is smart either, gave me a wonderful ride to my Home. I often say to him, u r d Master and i would like to be ur Master piece, he replies, sure i l make u. He recruited me, he is teaching me d life - d work - d world of people and ofocurse he is my Mentor. Today he inspired a wonderful thing, the Deja Vu continues.

Can i make it?. Sure prabhu, u r gonna thank him.

Tuesday 7 July 2009

"ரகசியம் சொன்னாள்"

இரு ஜோடி இமை மூடி,
ஒரு ஜோடி இதழ் திறவாமல்,
முடிவுரை தொடா ரகசியம் சொன்னாள்.

முன்னுரையாய் -

பிசாசு, எருமை, போக்கிரி, பொய்யான்,
போடா, அழகன், செல்லம், காதலன், புருஷன் என வசைபாடினாள்!.

பொருளுரையாய் -

தண்ணிக்குடத்தில் தலைநீட்டி பார்த்தேனாம்
வெட்கப்படுகையில் வேடிக்கை பார்த்தேனாம்
அம்மா திட்டலை ரசிக்கும் ரசவாதமாய் என் முகமாம்
எதையும் ருசித்து சாப்பிடும் சுவையானேனாம்
யாவையும் ரசிக்கும் ரசிப்பை பரிசளித்தேனாம்

துயில் எழுகையில் தூணோரமாய்!
நடைபாதையில் கருவேலம் பூக்களாய்!
அவள் வீட்டுக்குள் மருமகனாய்!
தன் வாழ்க்கை தமிழுக்கு இலக்கணமாய்!
முத்தாய், கணவனாய் எனை
கேட்டாள்!

என்னுள் துடித்த இதயம் இசைத்தது
கருப்பு வெள்ளை என் கண்கள் அவள் நிறம் பூசியது

மாம்பூவின் வாசம்,
இலுப்பைக்காயின் இனிப்பு,
தரைதொட்ட வெள்ளரியின் துவர்ப்பு,
அம்மாவின் அழுக்கு புடவைச்சுவை,
பாட்டி கிள்ளிய வெற்றிலை காம்பு,
செட்டியார்கடையின் கமர்கட்டு,
இவை அனைத்தும் என் நினைவுகளில் - உன்னால் மறுபடியும்.

முடிவுரை என்றெண்ணி அருகே வா என்றேன்
மிக அருகே வந்தாய்! முன்னுரை எழுதலானேன்.

Top Tamil Blogs by Tamilers