தவம், கடவுள், பக்தி, இவைகானும் அனுபவம் எனக்கில்லை
ஆராயும் நுண்ணறிவும் இல்லை!
என் அனுபவம், மக்களும் மாக்களுமே!
யாம் அறிந்தது அவைகளிடத்து அன்பு செய்தல்!
வாடிய பயிரை காணும்போதெல்லாம் தானும் வாடிய என் பாட்டன் வள்ளலார்
சமூகத்தை சார்ந்தவன் நான்! - அன்பு செய்தலை தவிர வேறன்ன பேரானந்தம் எனக்கு!
சொல் நண்பா!?,
பறவைகளை நேசிக்கிறேன், அவைகளோடு சண்டை போடுவதே எனக்கு பேரானந்தம்!
ஆம், மாலைவேளைகளில் அவைகளோடு பேச்சு யுத்தம், வந்து பார் நண்பா, எங்கள் ஊர் கோவில் ஆலமரத்துக்கு!
மரங்களோடு இனைந்து, கொடிகளோடு சாய்ந்து, பயிர்களோடு பயின்று தென்றலோடு உலா வருவதில் எத்துனை சுகம்!.
ஆற்றங்கரயில அப்டி என்னதான் இருக்கோ!?, என் அன்னையின் சுப்ரபாதம் அது!
அவளுக்கும் தெரியும் மனிதனை ஆனந்தமாக்கும் மந்திரம் அங்குள்ளது!!
மண்வாசனை, இந்த சொல்லே போதுமே, ஆயிரம் நினைவுகள் கண்திரையில் வருமே!
புழுதி, என் இனத்தின் நிறம் அது, எங்கள் ஆனந்தங்களை பரப்பும் ஊடகம்!
இவை தவிர வேறன்ன வேண்டும் நண்பா, இவைகளே எனக்கு கடவுளை விட பெரிது!
யாம் விரும்பவதெல்லாம், எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றும் அறியேன் பராபரமே!.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment