Saturday, 23 May 2009

காதல் அப்டினா?



காவியமா?
- மறுத்த காலத்தில், துல்லியமாக திடமாக பயமின்றி ஒப்புகொண்டதால், ஏறக்குறைய சொர்க்கத்தில் ஒன்றாய் போனதால் அது சரித்திர சம்பவமானது!. பிற்காலத்தில் வேலை வெட்டி இல்லாத சிலர் , உட்கார்ந்து மிகைப்படுத்தி ஏட்டில் ஏற்றியதால் , அந்த காகிதகொத்து இன்று காவியமா?, என் மனம் மறுக்கிறது!. தெய்வீகமா? - தெய்வங்களே , நிபந்தனைகளுக்கும் வாதத்திற்கும் உட்படுத்த படுவதால் காதல் எப்படி இதனோடு கைகோர்க்கும்?. ஒரு வேலை கண்களுக்கு புலபடாததால், உணர்வுகளால் உணரபடுவதால் அது தெய்வீகமா?, இருக்காது!!. ஏனெனில் பக்தி இலக்கணம் பாழ்படும். ஆங்கே பக்தன் யாசிக்கிறான்!, இங்கே காதலன் உரிமை கோர்கிறான்!.
புனிதமா? - எனை பொறுத்தவரை புனிதம் எனப்படுவது, புதுமைகளால் மேருகேற்றபடுவது. மாறாக காதல் இங்கே மெருகேரியதைவிட சிதைக்கபட்டதே அதிகம் என்பேன்!! பின் எவ்வாறு அதை புனிதம் எனலாம்!!, இல்லை!!!
உணர்வுதொகுப்பா? - கண்டிப்பாக இருக்க இயலாது. ஏனெனில் ஒரு உணர்வு மனிதனை ஆட்கொள்ளுமே தவிர அடிமை செய்யாது. ஆக சிறந்த உணர்விடம் மனிதன் எக்காலத்திலும் அடிமை ஆவதில்லை, இங்கே காதல் மனிதனை அடிமை ஆக்குகிறதே!, எத்துனை காதல் தோல்விகள்!( காதல் தோற்பதில்லை, காதலர்கள் தோற்கிறார்கள், அட போங்கையா கொய்யால, காதலர்கள் இல்லையெனில் ஏதையா காதல்?), காதல் மரணங்கள்!!?, ஆக உணர்வுதொகுப்பும் இல்லை!. டேய் பிரபு , பின்ன என்னதாண்டா அது? சொல்லவில்லை என்றால் நீ காதலிக்கும்படி சாபம் தருவார்கள் வாசகர்கள்!!, வேண்டாம் விபரீதம் சொல்லிவிடுகிறேன்!!!
உடல் சார்ந்த , உள்ளம் மகிழ உயிர்தொன்றி இயற்கை காரணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வேதிவினை. ஹார்மோன்களின் திட்டமிட்ட சதி அது!!
புரியிதா பா?.. நல்லா கேக்குறாங்கய்யா Detailluuuu !!!!

நண்பன் என்ற போர்வையில் உள்ள ஒரு உயிரை பற்றி!!



இன்னாடா சந்திரா, இன்னா பண்ண போற?. இத்தன டார்ச்சர் பண்ணி அனுபவிக்க போற!
தண்ணிய போட்டு ப்ளேட போட்டு, அறுத்து காதுல ரத்தம் வர வச்ச!! 

அட பாவி பயல!!சமைக்கிறேன்னு சொன்ன, தெரு நாய் பூனைகள கொன்ன!!, அட நாடோடி பயல!!
நீ பண்ண இம்சை ல என் நண்பன் ரமேஷ தற்கொலைக்கு தூண்டுன!!! அட கருமம் புடிச்சவன!, அட நாதாரி பயல உன்னால வர போவுது உணவு பஞ்சமே!!
என்னடா சந்திரா என்ன பண்ண போற!!?.

அட ஞான சூனியமே, Ramesh Pawara Athletenu சொன்ன சொறி புடிச்சவனே!! 50km/h la through பண்ணிட்டு 160km/h Bowlingnu சொன்ன வணங்காமுடி பயலே!!

அட சூனியம் புடிச்சவனே , என்னையும் கொன்ன, தமிழ் உலக மாநாடு சொல்லி, அட பாவி பயல எப்ப நீ திருந்துவ?!!

Tuesday, 12 May 2009


என் நண்பர்கள் குழுமப்புகைபடம்.
From left to right, my seniors - Ebhi, Hari, my friend Chandra, again senior Sudar, and then myslef, again senior Jaya and finally senior Kamal.

"குசும்பின் உச்ச நட்ச்சத்திரங்கள்"


முதலில் மேல்கண்ட இப்படம் உங்கள் பார்வைக்கு!.

நண்பன் ஒருவன் வாயிலாக ஒரு படம் கிடைத்தது. அது பொதுவாக , எதிர்மறையான எண்ணங்களை தூண்டினாலும், எனக்கு சற்று வேறு வகையான கருத்துகளை சிந்திக்க தூண்டியது!.

என் இன மூத்த சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்பட செயலாளர்கள். என் கருத்துகள் இதோ, என்றும் மறையா ரசிப்புத்தன்மை - அற்ப வயது ஒரு தடையல்ல. வரம்பு மீராமை - தங்கள் ரசிப்புத்தன்மையை வெளியிடுவதில் எத்துனை ஒரு ஒழுக்கம். ஆபாசம் இல்லா அந்த புகைப்படம் , துளி அளவு வரம்பு மீரா கருத்தாண்மை. அதில் புன்னகை ராணி, இதை விட பெண்மைக்கு உயர்ந்த சொல் உண்டோ!! அச்சமின்மை - அட அடா!!!, தங்கள் புகைப்படத்துடன், கல்வி தகுதியுடன் ஒரு அறிமுகம்!! பெர்சுக பெர்சுகதான்!!!. குசும்பின் உச்சம் - இப்படத்தின் பிறப்பு ஒரு பொதுவான இடம். மொத்தத்தில் இவர்களுக்கு நான் கொடுக்கும் பட்டம், குசும்பின் உச்ச நட்ச்சத்திரங்கள்!! இது என் தனிப்பட்ட கருத்து , வாசிப்போர்கள் சற்று மன்னிக்கவும்!!!

பன்றிக்கு காய்ச்சல், மனிதநேயத்துக்கும் காய்ச்சல்!

ஆராய்ச்சிகளை செய்கிறான், கோடிகளை கொட்டுகிறான். மனிதனுக்கு காய்ச்சலாம், மனிதனை விடுத்து காரணிக்கிருமிகளை அழிக்கிறான். குழிகளை வெட்டுகிறான், தெருக்கோடியிலே கொட்டுகிறான். பன்றிக்கு காய்ச்சலாம் , காரணிக்கிருமிகளை விடுத்து பன்றிகளை அழிக்கிறான். எல்லா உயிர்களும் சமம் தானே?, மனிதநேயம் எங்கே?, ஒஹ்!!, அவையெல்லாம் வெறும் ஏட்டில் தானோ!!..

Sunday, 10 May 2009

"இப்படி செய்தால்"



சுயநலம் பித்துபிடித்த 
மக்களுக்கு இப்படி சொன்னால், எண்ணம் ஈடேருமோ!! 
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், வீட்டுமக்கள் வளம் காப்போம்!!

Friday, 8 May 2009

"எனை மாற்றிய தோழமை"

அறிமுக போராட்டம் இளங்கலை பொறியியல் மூன்றாமாண்டு, தோழர்கள் ( அப்பொழுது எனக்கு தோழிகள் இல்லை ! ) அனைவரும் பெற்ற வேலைவாய்ப்பின் பெருமிதத்தாலும், பெறப்போகும் வேலை முனைப்பிலும் மூழ்கிய நேரமது. நெருங்கிய ஒரு தோழன் வழியாக நான் அறிந்த முதல் பெண்மை; பிற்காலத்தில என் அறியாமை இரவுகளின் வெண்மை. அக்காலத்தில் என்னுள் பெண்மைப்பற்றிய உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும் , குறிப்பிடும் படியான அபிப்பிராயம் இருந்ததில்லை. அதன் விளைவு, நான் பெற்ற அந்த அறிமுகத்தை மெருகூட்ட தவறினேன். அனால் அப்பெண்மை தவறவில்லை போலும்!. என்னால் முடிந்தது, மின்னஞ்சல் வழியாக இந்த இளங்கலை நட்பை சிதையாமல் காத்துகொண்டது. ஒப்பந்தங்கள் நான் முதுகலைப்பயில வெளிநாடு செல்லும் முனைப்பில் இருந்தபோது , அப்பெண்மையின் நட்பு நான் அறியா எனை ஆட்கொண்டதில் ஆச்சர்யமில்லை!. சிறு சிறு கைப்பேசி குறு செய்திகளினாலும் கைப்பேசி அலைப்புகளினாலும் அப்பெண்மை எனை செதுக்க ஆரம்பித்ததை நான் அப்பொழுது உணரவில்லை. அதுவரை பெண்மையின் சிந்தனைகளுக்கு செவி தராதவன் , பிறகு மெல்ல இசைந்ததை நான் உணர்ந்தேன். எனக்குள்; எனைசூழ்ந்த பெண்மையைப்பற்றிய பிற்போக்கான எண்ணங்களை அப்புரபடுத்திய அப்பெண்மையின் முனைப்பை நான் என்பால் அவள் கொண்ட முதல் ஒப்பந்தம் என்பேன். வெறும் பயனற்ற பொழுதுபோக்கு சாரத்தை மட்டும் கொண்டதில்லை எங்கள் தோழமை பேச்சு, மாறாக எதிர்கால முன்னேற்றத்தை பற்றியும், எங்கள் துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், அதிகமாக வாழ்கைக்கல்வியைப்பபற்றியும் இருக்கும். ஒரு பெண்மையிடம் கலந்துரையாட வேண்டிய பெருமைதகுந்த நாகரீகத்தை தண்ணீர் ஊற்றி வளர்த்த அந்த பெண்மையின் ஆதங்கத்தை நான் என்பால் அவள் கொண்ட இரண்டாவது ஒப்பந்தம் என்பேன். சொல்லபோனால், அப்பெண்மையின் நட்பை நான் அறிந்ததேன்னமோ இந்த ஜெர்மானிய மண்ணில் தான். அவ்வளவு சக்தி போல இம்மண்ணுக்கு!. என்னுடைய முன்னேற்றம் மற்றும் ஒவ்வொரு செயல்களிலும் அவளின் சிந்தனைகள் எங்கோ ஒரு இடத்தில் ஒளிந்திருக்கும். நான் தடமாறிய போது அங்கே தடைகற்களாக இருக்கு பெண்மை , நான் சரியான வழியில் செல்லும் போது ஊக்கமளித்து பயண வேகத்தை கூட்டியதும் இப்பெண்மைதான். அத்தகைய மாற்றத்தை ஒரு பெண்மை என்னுள் ஏற்படுத்திய சாதுரியத்தை கண்டு நான் அதனை ஒப்பந்தம் என்றழைப்பது சரியே!. எனக்கு கிடைத்த இத்தகைய தோழமை, என் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நான் அவர்களை ஒரு நல்ல பெண்மையை தோழமையாக்க அறிவுருத்துவதுண்டு. என்னடா, இந்த நட்பு!, ஒரு சுவாரஷ்யம் இல்லை, ஒரு கலாட்டா இல்லை என் நீங்கள் எண்ணலாம். எங்கள் பேச்சை ஒட்டுகேட்டால் நீங்கள் ஒரு முழு நீல நகைச்சுவை திரைப்படமே எடுக்கலாம். என் தோழியின் நகைச்சுவை உணர்வை அளக்க அளவுகோலே இல்லை என்பேன். என் உள்ளார்ந்த மாற்றத்தை தவிர, என் போக்கிரித்தனமான நடை, உடை, பாவனைகளை மாற்றியதில் அவளுக்கும் பங்குண்டு. தன்னுடைய கைதேர்ந்த கலையால், என் வெளியார்ந்த மாற்றத்திற்கு வித்திட்டவளே அவள் தான். என் தோல்விகளே, என் வெற்றிகள் எங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும்; அது கைபேசி மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, இல்லை நேரிலோ, அப்பெண்மையை வெறுப்பேத்த முயற்சி செய்து வெற்றிபெறுவதுண்டு. ஆனால் முடிவில் தோல்வி என்னமோ எனக்குதான். நான் பலமுறை என் நட்பை முறித்திக்கொள்ள முயற்சி செய்து பெற்ற தோல்விகளே என் வாழ்கையின் பல வெற்றிகளுக்கு காரணம். என் ஒவ்வொரு முயற்சியிம் போதும், இப்பெண்மையின் பங்களிப்பு என்னவோ " உனக்கு வேண்டுமானால் என் நட்பு தேவையில்லாமல் போகலாம், ஆனால் எனக்கு வேண்டும் " இதுவாகத்தான் இருக்கும். கடவுளின் படைப்பின் பெருமை இந்த பெண்மை போலும்!. இன்று மென்பொருள் சேவையில் முக்கிய பங்களிப்பில் இருக்கும் என் தோழியின் ஆண்மை ஆளுமை கண்டு நான் மிரண்டு போனதுண்டு. அவளிடம் நான் காத்துக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அவளுடைய வெற்றியாகட்டும் , தொல்வியாகட்டும் என்னிடம் பகிர்ந்துகொள்ள அவள் தவறியதில்லை. அந்த பங்களிப்பின் முடிவில், நான் கற்றுகொள்வது அவளின் அனுபவப்பாடங்கள். சொல்லபோனால், என்னுள், என்னால் இயலாத மாற்றத்தை அவள் செய்கிறாள். இத்தகைய பெண்மையை நான் என்னவென்று சொல்வது. இன்னொரு தோழன் விரைவில் திருமதியாக காத்திருக்கும் என் தோழி சொல்கிறாள், திருமணத்திற்கு பிறகு அவள் கணவன் என் தோழனாம். இதை எங்கள் ஒவ்வொரு கலந்துரையாடல் முடிவில் அவள் கூற தவறியதில்லை. எனக்கு சிறு வயதில் பாரதி பாடிய பாடல் ஞாபகம் வருகிறது " என்ன தவம் செய்தேன் இப்பெண்மையை என் தோழியாக பெற! " . ஒரு ஆண் முழுமை அடைவது என்பது ஒரு பெண்ணால் சுலபமாக முடியும். அப்பெண் தாயாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், ஏன், சகோதரியாக கூட இருக்கலாம். நான் அதிர்ஷ்டசாலி , இவையெல்லாம் பெற்றும் , இதற்கும் மேலாக இக்கட்டுரையின் நாயகி ஒரு பெண்மையை என் தோழியாக பெற்றேன்!. வடிவேலு சொல்வது போல " நீ நல்லா இருமா!". இதை தவிர வேற சொல்ல எனக்கு தெரியவில்லை!!.

"என் முதல் பதிவு"

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கோடைமலை. கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம். பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ். தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம். சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம். விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி. என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சோற்று உணவு. நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம். இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்தது - என் முதல் காதல். அத்துணை படபடப்பை தந்தது - என் முதல் பதிவு!!!

Top Tamil Blogs by Tamilers