Saturday, 23 May 2009

காதல் அப்டினா?



காவியமா?
- மறுத்த காலத்தில், துல்லியமாக திடமாக பயமின்றி ஒப்புகொண்டதால், ஏறக்குறைய சொர்க்கத்தில் ஒன்றாய் போனதால் அது சரித்திர சம்பவமானது!. பிற்காலத்தில் வேலை வெட்டி இல்லாத சிலர் , உட்கார்ந்து மிகைப்படுத்தி ஏட்டில் ஏற்றியதால் , அந்த காகிதகொத்து இன்று காவியமா?, என் மனம் மறுக்கிறது!. தெய்வீகமா? - தெய்வங்களே , நிபந்தனைகளுக்கும் வாதத்திற்கும் உட்படுத்த படுவதால் காதல் எப்படி இதனோடு கைகோர்க்கும்?. ஒரு வேலை கண்களுக்கு புலபடாததால், உணர்வுகளால் உணரபடுவதால் அது தெய்வீகமா?, இருக்காது!!. ஏனெனில் பக்தி இலக்கணம் பாழ்படும். ஆங்கே பக்தன் யாசிக்கிறான்!, இங்கே காதலன் உரிமை கோர்கிறான்!.
புனிதமா? - எனை பொறுத்தவரை புனிதம் எனப்படுவது, புதுமைகளால் மேருகேற்றபடுவது. மாறாக காதல் இங்கே மெருகேரியதைவிட சிதைக்கபட்டதே அதிகம் என்பேன்!! பின் எவ்வாறு அதை புனிதம் எனலாம்!!, இல்லை!!!
உணர்வுதொகுப்பா? - கண்டிப்பாக இருக்க இயலாது. ஏனெனில் ஒரு உணர்வு மனிதனை ஆட்கொள்ளுமே தவிர அடிமை செய்யாது. ஆக சிறந்த உணர்விடம் மனிதன் எக்காலத்திலும் அடிமை ஆவதில்லை, இங்கே காதல் மனிதனை அடிமை ஆக்குகிறதே!, எத்துனை காதல் தோல்விகள்!( காதல் தோற்பதில்லை, காதலர்கள் தோற்கிறார்கள், அட போங்கையா கொய்யால, காதலர்கள் இல்லையெனில் ஏதையா காதல்?), காதல் மரணங்கள்!!?, ஆக உணர்வுதொகுப்பும் இல்லை!. டேய் பிரபு , பின்ன என்னதாண்டா அது? சொல்லவில்லை என்றால் நீ காதலிக்கும்படி சாபம் தருவார்கள் வாசகர்கள்!!, வேண்டாம் விபரீதம் சொல்லிவிடுகிறேன்!!!
உடல் சார்ந்த , உள்ளம் மகிழ உயிர்தொன்றி இயற்கை காரணிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வேதிவினை. ஹார்மோன்களின் திட்டமிட்ட சதி அது!!
புரியிதா பா?.. நல்லா கேக்குறாங்கய்யா Detailluuuu !!!!

3 comments:

Ananth said...

ஆக மொத்ததுல இவனும் காதல்னால பாதிக்கபற்றுக்கான், இவனை இப்படி சிந்திக்க சொன்னது என்ன ஹார்மோனின் சதியோ அது தான் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்ததும் சிந்திக்க தோன்றி இருக்கும்.....

Prabhu said...

Athu Harmone illai nanbane, maaraaha athu Moolai da maamsu, moolai!!!!

Anonymous said...

oi...ennada ithu.....right vidu...nee aniyayathuku nalla paiyan da....en frnd la athaan.....

Post a Comment

Top Tamil Blogs by Tamilers