Thursday, 13 August 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 2



மாலை நேரங்கள், அலுவல்களை அணைத்துவிட்டு,
தலைவன் தாமதமாய், தலைவி எரிமலையாய்,
சிரிப்பான், சமாளிப்பான், அணைப்பான்!
அது தாமத வெட்கங்கள்!


தலைவி பேரழகியானாலும்,
சுற்றத்து குமரிகளை நோட்டமிட்டு,
தலைவியிடம் அசடுவளியும் தலைவனிடத்து,
வாலிப வெட்கம்!

தன்பாதியின் சுற்றத்தை பரிகாசித்து,
தன்சுற்றத்தை புகழ்ந்து பேசி,
தலைவியிடத்து சம்பாதிக்கும் கோபம்
ஏகாந்த வெட்கம்!



ஆயிரம் பேரை ஆளுமை செய்தாலும்,
தலைவியின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு,
அவ்வபோது அவள் சொல் கேட்கும்,
ஆசை வெட்கம்!

தலைவியின் பிறந்த வீடு,
அங்கு செல்வதே அரிது, சென்றாலும்,
மதியாமல் திரிந்து, ஏளனம் செய்வது,
மாப்பிளைமுறுக்கு வெட்கம்!



வருவான், போவான், வழக்கம் போல் பேசுவான்,
ஒரு நாள் தலைவி அறியா வியப்புதனை
அவளுக்கே பரிசளித்து, புதிதாய் தனையாக்கும்
திடீர் வெட்கம்!

Tuesday, 4 August 2009

அனுமதியும் வரமும்

நீ அனுமதித்தால், நான்
நீ பருகும் நீராய் கடவுளிடம் வரம் கேட்பேன்!
உன் வெண்ணிற பற்களிடையே ஒட்டி உறவாடும் அந்த பயணித்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
நீ பூசும் உதட்டு சாயமாக வரம் கேட்பேன்!
உன் செந்நிற இதழ்களிடையே தஞ்சம்புகும் அந்த தருணத்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன்னை பிரதிபலிக்கும் முககண்ணாடியாய் வரம் கேட்பேன்!
உன் நிறம் மாறா முகபிம்பத்தில் நகையாடும் அந்த சினுங்களுக்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் வருகையை பறையும் கால் கொலுசுகலாய் வரம் கேட்பேன்!
உன் அந்தத்தை அறிந்துகொள்ளும் அந்த வாய்ப்பிற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் நெற்றிப்பொட்டின் குங்குமமாய் வரம் கேட்பேன்!
உன் இருபுருவ சாமரங்கள் வீசும் அந்த தென்றலுக்காக.

அனுமதியும் வரமும் தொடரும்..,

Monday, 3 August 2009

தவமின்றி வரம் கிடைக்குமா?

கடும்தவம் புரிவார்
உலகின்பம் துறவார்!
ஞான ஒளி பெற்று, பேரின்பம் அடைவார்!.

வியந்தேன்,

என்ன தவம் புரிந்தேன்!
உலகின்பம் மறந்தேன்!
கடை இரு விழியால் பேரின்பம் அடைந்தேன்!

ஒரு இரவில் கூடுவார்!
பத்துத்திங்கள் காப்பார்!
புதியதோர் உயிர்க்கு பிறப்புதனை பரிசளிப்பார்!

வியந்தேன்,

ஒரு நாழிகை கண்டேன்!
மறு நாழிகை நினைந்தேன்!
புதியவன் என் பிறப்புதனை எனக்கே பரிசளித்தேன்!

பகவத்கீதை அறிந்தேன்!
எதனையும் கொண்டுவரவில்லை!
எதனையும் விட்டு போவதில்லை!
எதனையும் எடுத்து செல்வதில்லை!

வியந்தேன்,

உன் அழகினை கொண்டுவந்தாய்!
அதன் சுவடுகளை விட்டு சென்றாய்!
என் நினைவுதனை எடுத்து சென்றாய்!
யாரடி நீ?.
புதிய காதல்கீதை அருளும் பெண்பால் கிருஷ்ணனா?

Top Tamil Blogs by Tamilers