Thursday, 13 August 2009

ஆண்மை தேசத்து வெட்கங்கள் - பாகம் 2



மாலை நேரங்கள், அலுவல்களை அணைத்துவிட்டு,
தலைவன் தாமதமாய், தலைவி எரிமலையாய்,
சிரிப்பான், சமாளிப்பான், அணைப்பான்!
அது தாமத வெட்கங்கள்!


தலைவி பேரழகியானாலும்,
சுற்றத்து குமரிகளை நோட்டமிட்டு,
தலைவியிடம் அசடுவளியும் தலைவனிடத்து,
வாலிப வெட்கம்!

தன்பாதியின் சுற்றத்தை பரிகாசித்து,
தன்சுற்றத்தை புகழ்ந்து பேசி,
தலைவியிடத்து சம்பாதிக்கும் கோபம்
ஏகாந்த வெட்கம்!



ஆயிரம் பேரை ஆளுமை செய்தாலும்,
தலைவியின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு,
அவ்வபோது அவள் சொல் கேட்கும்,
ஆசை வெட்கம்!

தலைவியின் பிறந்த வீடு,
அங்கு செல்வதே அரிது, சென்றாலும்,
மதியாமல் திரிந்து, ஏளனம் செய்வது,
மாப்பிளைமுறுக்கு வெட்கம்!



வருவான், போவான், வழக்கம் போல் பேசுவான்,
ஒரு நாள் தலைவி அறியா வியப்புதனை
அவளுக்கே பரிசளித்து, புதிதாய் தனையாக்கும்
திடீர் வெட்கம்!

0 comments:

Post a Comment

Top Tamil Blogs by Tamilers