Tuesday, 4 August 2009

அனுமதியும் வரமும்

நீ அனுமதித்தால், நான்
நீ பருகும் நீராய் கடவுளிடம் வரம் கேட்பேன்!
உன் வெண்ணிற பற்களிடையே ஒட்டி உறவாடும் அந்த பயணித்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
நீ பூசும் உதட்டு சாயமாக வரம் கேட்பேன்!
உன் செந்நிற இதழ்களிடையே தஞ்சம்புகும் அந்த தருணத்திற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன்னை பிரதிபலிக்கும் முககண்ணாடியாய் வரம் கேட்பேன்!
உன் நிறம் மாறா முகபிம்பத்தில் நகையாடும் அந்த சினுங்களுக்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் வருகையை பறையும் கால் கொலுசுகலாய் வரம் கேட்பேன்!
உன் அந்தத்தை அறிந்துகொள்ளும் அந்த வாய்ப்பிற்காக.

நீ அனுமதித்தால், நான்
உன் நெற்றிப்பொட்டின் குங்குமமாய் வரம் கேட்பேன்!
உன் இருபுருவ சாமரங்கள் வீசும் அந்த தென்றலுக்காக.

அனுமதியும் வரமும் தொடரும்..,

0 comments:

Post a Comment

Top Tamil Blogs by Tamilers