Monday, 3 August 2009

தவமின்றி வரம் கிடைக்குமா?

கடும்தவம் புரிவார்
உலகின்பம் துறவார்!
ஞான ஒளி பெற்று, பேரின்பம் அடைவார்!.

வியந்தேன்,

என்ன தவம் புரிந்தேன்!
உலகின்பம் மறந்தேன்!
கடை இரு விழியால் பேரின்பம் அடைந்தேன்!

ஒரு இரவில் கூடுவார்!
பத்துத்திங்கள் காப்பார்!
புதியதோர் உயிர்க்கு பிறப்புதனை பரிசளிப்பார்!

வியந்தேன்,

ஒரு நாழிகை கண்டேன்!
மறு நாழிகை நினைந்தேன்!
புதியவன் என் பிறப்புதனை எனக்கே பரிசளித்தேன்!

பகவத்கீதை அறிந்தேன்!
எதனையும் கொண்டுவரவில்லை!
எதனையும் விட்டு போவதில்லை!
எதனையும் எடுத்து செல்வதில்லை!

வியந்தேன்,

உன் அழகினை கொண்டுவந்தாய்!
அதன் சுவடுகளை விட்டு சென்றாய்!
என் நினைவுதனை எடுத்து சென்றாய்!
யாரடி நீ?.
புதிய காதல்கீதை அருளும் பெண்பால் கிருஷ்ணனா?

0 comments:

Post a Comment

Top Tamil Blogs by Tamilers