Friday, 8 May 2009

"என் முதல் பதிவு"

சற்றென அள்ளிதெளித்த வெட்பதட்பம் - என் முதல் கோடைமலை. கூட்டமாய் வண்ணத்துபூச்சியின் அத்துமீறல் - என் முதல் பூக்காலம். பேரனாந்த மழலையின் அம்மாச்சொல் - என் முதல் மழலைத்தமிழ். தனைபார்த்த பூமிக்கு வானத்தின் பரிசாய் அழுகை - என் முதல் விவசாய உத்வேகம். சுற்றமே எதிரியாய் என் அன்னை கூட - என் முதல் பள்ளி பயணம். விழியில் பால்வண்ணம், மனதில் குளிர் எண்ணம் - என் முதல் பௌர்ணமி. என் இருவிரல் எண்ணா சோற்றுபருக்கை - என் முதல் சோற்று உணவு. நிகழ்காலமா, எதிர்காலமா, இறந்தகாலமா புரியா! - என் முதல் பருவக்காலம். இவையெல்லாம் சில நொடி தலை தாழ்ந்தது - என் முதல் காதல். அத்துணை படபடப்பை தந்தது - என் முதல் பதிவு!!!

3 comments:

Ananth said...

இத்தனை எண்ணங்களும் அழகாக இருந்தது, இதை எல்லாம் தலை தாழ்த்திய முதல் காதல் எவ்வளவு அழகாக இருந்துருக்கும்,,,,,,

S.V.Rajkumar said...

All the best for your, new born net baby.

Prabhu said...

Mikka nandri nanba!!

Post a Comment

Top Tamil Blogs by Tamilers