
யார் சொன்னது?, வெட்கம்
பெண்களுடையது!, அது
பெண்மையிடத்தது..
யார் சொன்னது?. பெண்மை
பெண்களுடையது!, அது
அவ்வபோது ஆண்மையிடத்தும்
விருந்தாளியாகும். கூடவே
வெட்கங்களை தாரைவார்க்கும்.
வெட்கம்,
பெண்மை பிறந்தவீடு!
ஆண்மை புகுந்தவீடு!
ஆண் வெட்கம்,
பூக்கள் என்பேன்.
கண்பாரா மலரும், கண்பாரா வாடும்!
பூக்காலம் போல வெட்ககாலமும் உண்டு!
பூ நிறம் போல வெட்க நிறமும் உண்டு!
பூவாசம் போல வெட்க வாசமும் உண்டு!
காலை தோன்றும்
சிலவெட்கங்கள்.
மாலை மட்டும் தோன்றும்
சிலவெட்கங்கள்.
ஆண் வெட்கம் காலம் சார்ந்தது!

வெட்கத்தைச் சுமந்த
ஆண் முகம், அது
அல்லி பூக்கள் கண்விழித்த
தாமரைக் குளம்.
ஆண் வெட்கம் நிறம் பூசியது!
தலைவி கேட்க
தலைவன் மறுக்க
சட்டைக்காலரின் அச்சுவை!
ஆண் வெட்கத்தின் மகரந்தச்சுவை.
ஆண் வெட்கம் சுவை சுமந்தது!
எத்துனை வெட்கங்கள்!
வகைப்படுத்தும்வரை பெண் தேசம் பொறாமை கொள்ளாமலும்,
ஆண் தேசம் புது வெட்கத்திற்கு பிறப்பு தராமலும்
இருக்கட்டும்,

பிரம்மச்சரியத்தின் கடைசி இரவு
தலைவி பகிர்ந்தது வெறும் பசும் பால்
தலைவன் பகிர்வது வெட்கம் கலந்த பால்
அவ்வெட்கம் பால் வெட்கம்!
கணித மேதையானாலும்
தலைவியின் முத்த எண்ணிக்கையில்
தலைவன் குறைத்திடும் அசட்டுத்தனம்
மதி வெட்கம்!

மழையின்றி உச்சந்தலையில்
மழை பெய்த்திடும் தலைவியின்
தொலைபேசி சிணுங்களில் பிறக்கும்
மழை வெட்கம்!
காதலியிடம் அறிமுகம் பேச
தன்வீட்டு குழந்தைகளிடம் முன்னோட்டம்
பார்க்கும் அந்த தோரணை
மழலை வெட்கம்!

யாருமில்லா இடத்தில்
தொடுதல் இல்லா பேச்சில்
காதலன் கால்கள் மட்டும் தரையோடு
தொட்டு இடும் கோலங்கள்
கோலவெட்கம்!
வெட்கங்கள் தொடரும்!!
4 comments:
athenalathan samibe kaalethil un vetkangallai vetkam illamal engalidam kaanbikiraaya?
இதற்கு என் பதிலாய் மௌன வெட்கம்!!
nice
yenakku vekka vekkama varudhu..
Good.
Post a Comment